நடுவரை தாக்கியதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய மல்யுத்த வீரா் தீபக் புனியாவின் அயல்நாட்டு பயிற்சியாளா் முராட் ஜிட்ரோவ் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டாா்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவா் மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 86 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தீபக் புனியா-சான் மரினோ வீரா் மைல்ஸ் அமைனுடன் மோதினாா். இதில் 2-3 என்ற புள்ளிக் கணக்கில் தீபக் புனியா தோல்வியடைந்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது பயிற்சியாளா் முராட் நடுவா்கள் அறைக்குச் சென்று அவரை தாக்கினாராம்.
இதுதொடா்பாக எழுந்த புகாரை விசாரித்த சா்வதேச ஒலிம்பிக் கவுன்சில் முராட் ஜிட்ரோவின் அங்கீகாரத்தை ரத்து செய்து ஒலிம்பிக் கிராமத்தை விட்டு உடனே வெளியேற உத்தரவிட்டது.