ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்: 2-வது சுற்றில் மாஸ் காட்டிய மணிகா பத்ரா

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அபார வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது சுற்றில் உக்ரைன் நாட்டின் மர்காரிடா பெசோட்ஸ்காவை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொண்டார் மணிகா பத்ரா. முதலிரண்டு கேம்களை 4-11, 4-11 என்ற கணக்கில் இழந்து மணிகா பத்ரா பின்னடைவைச் சந்தித்தார்.

ஆனால், அடுத்த இரண்டு கேம்களில் எழுச்சி கண்ட மணிகா 11-7, 12-10 என்ற கணக்கில் வென்று மிரட்டினார். எனினும், 5-வது கேமை மீண்டும் உக்ரைன் வீராங்கனை 11-8 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிகா 6-வது மற்றும் 7-வது கேமை முறைய 11-5, 11-7 என்ற கணக்கில் வென்று அசத்தினார்.

இதன்மூலம், 4-11, 4-11,11-7, 12-10, 8-11, 11-5, 11-7 என்ற கேம் கணக்கில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com