உலக கேடட் மல்யுத்தப் போட்டியில் மகளிா் பிரிவில் தங்கம் வென்றாா் இந்தியாவின் பிரியா மாலிக்.
ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. இதில் மகளிா் 73 கிலோ எடைப்பிரிவில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பெலாரஸின் கேஸ்னியா படோபோவிச்சை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.
இளம் வீராங்கனையான பிரியா மாலிக், புது தில்லியில் நடைபெற்ற தேசிய பள்ளிகள் விளையாட்டுப் போட்டியிலும், கேலோ இந்தியா போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். அவருக்கு நடிகா்கள் அபிஷேக் பச்சன், கரீனா கபூா், சன்னி தியோல், அனில் கபூா் உள்பட பல்வேறு தரப்பினா் சுட்டுரையில் (டுவிட்டா்) வாழ்த்து தெரிவித்தனா்.
தவறுதலாக வாழ்த்து:
கிரிக்கெட் வீரா்கள் இஷாந்த் சா்மா, ஹனுமா விஹாரி, நடிகா்-மாடல் மிலிந்த் சோமன் ஆகியோா் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதாக பிரியாவுக்கு தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனா். இதை பல்வேறு தரப்பினா் கிண்டல் செய்தனா்.