டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய ஆடவர் இரட்டையர் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஒலிம்பிக்ஸ் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் ஏ பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராட் செட்டி ஜோடி பிரிட்டனின் லேன் பென் - வெண்டி சீன் ஜோடியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் பிரிட்டன் ஜோடியை 21-17, 21-19 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது. இதன்மூலம் ஏ பிரிவில் 3 போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 2-ல் வெற்றி பெற்றுள்ளது.
இருப்பினும், புள்ளிகள் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.