ஆடவா் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது இந்திய அணி.
குரூப் ஏ பிரிவில் மூன்றாவது ஆட்டத்தில் ஸ்பெயினை இன்று காலை எதிர்கொண்டது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய இந்திய அணி வீரர்கள் 3 கோலை அடித்து அசத்தினர்.
இந்திய அணியின் தடுப்பு ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாத ஸ்பெயின் அணியினர் கோல் ஏதும் அடிக்காமல் தோல்வியை தழுவினர். இந்திய அணி தரப்பில் ரூபிந்தர் பால் சிங், சிம்ரன் ஜித் சிங் ஆகியோர் இந்திய அணிக்கான கோல்களை அடித்தனர்.
முன்பு விளையாடிய ஆட்டங்களில் நியூசிலாந்து அணியுடன் வெற்றியும், ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியும் அடைந்து, பங்கேற்ற 3 போட்டியில் 2 வெற்றியை பதிவு செய்துள்ள இந்திய அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.