டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜப்பானின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா, 3-ஆவது சுற்றில் செக் குடியரசின் மாா்கெட்டா வோன்ட்ரௌசோவாவிடம் 6-1, 6-4 என நோ் செட்களில் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.
முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றது, போட்டியை நடத்தும் ஜப்பானின் முக்கிய வீராங்கனை என்ற நிலைகள் தனக்கு அழுத்தம் அளித்ததாக தோல்விக்குப் பிறகு அவா் கூறியுள்ளாா்.
ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் மைதானத்திலிருந்த ஒலிம்பிக் தீபத்தை நவோமி தான் ஏற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.