குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். இது அவருக்கு முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
முந்தைய சுற்றில் அல்ஜீரியாவின் இச்ரக் சாயிப்பை 5-0 என முற்றிலுமாக வீழ்த்தினார் பூஜா. இரு முறை ஆசிய சாம்பியனான பூஜா ராணி, தனது காலிறுதியில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரும், இரு முறை ஆசிய சாம்பியனும், முன்னாள் உலக சாம்பியனுமான சீனாவின் லீ கியாங்கை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறார்.
கடந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியின் காலிறுதியில் லீ கியாங்கிடம் பூஜா ராணி தோல்வி கண்டுள்ளார். அதற்கு பூஜா பதிலடி கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.