ரோயிங் போட்டியில் ஆடவர் லைட்வெயிட் டபுள் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட், அரவிந்த் சிங் ஆகியோர் இணை இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறத் தவறியது.
முன்னதாக ரெபிசேஜ் சுற்று மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய இந்த கூட்டணி, அதில் 6 நிமிஷம் 24.41 விநாடிகளில் இலக்கை எட்டி கடைசி அணியாக வந்தது. இந்த 2-ஆவது அரையிறுதியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இரு அரையிறுதிகளிலும் முதல் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளே இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. அர்ஜூன், அரவிந்த் இணை அரையிறுதிக்கு முன்னேறியது, இந்தியாவின் ஒலிம்பிக் ரோயிங்கில்
அதிகபட்சமாகும்.