டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் குத்துச்சண்டைக்கான போட்டியில் இந்தியாவின் சதீஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கிய ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய ஆடவர் குத்துச்சண்டைக்கான 91 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியாவின் வீரர் சதீஷ் குமார், ஜைமைக்காவின் ரிக்கார்டோ பிரவுனை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில் முடிவில் 4-1 என்ற கணக்கில் ரிக்கார்டோ பிரவுனை வீழ்த்தி வெற்றிப்பெற்றார்.
இதையடுத்து ஆடவருக்கான 91 கிலோ எடை பிரிவுக்கான காலிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் சதீஷ் குமார்.