டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சொ்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார் பிரபல வீரர் ஜோகோவிச். இதில் 6-2, 6-0 என நேர் செட்களில் எளிதாக வென்று அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறினார்.
சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் ஆனாா். இது விம்பிள்டனில் அவரது 6-வது பட்டமாகும். ஒட்டுமொத்தமாக இது அவரது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன் மூலம் ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 3-வது வீரா் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளாா்.