டோக்கியோ தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் இன்றைய தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யாவின் வீராங்கனை பெரோவாவை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியின் முடிவில் ரஷ்யாவின் பெரோவாவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியின் தனிநபர் வில்வித்தைப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.