ரஞ்சி: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ரஞ்சி: பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி!

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ரோதக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 45.3 ஓவர்களில் 87 ரன்களுக்கு சுருண்டது. தமிழக அணியில் அதிகபட்சமாக இந்திரஜித் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்தார். 8 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை தரப்பில் குல்கர்னி, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய மும்பை அணி 67 ஓவர்களில் 176 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஆதித்ய தாரே 48, பவார் 35 ரன்கள் எடுத்தனர். தமிழகம் தரப்பில் விக்னேஷ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் கிறிஸ்து 3 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தமிழக அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 54 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. அபராஜித் 15, கெளசிக் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்கள். இன்று ஆட்டத்தைத் தொடர்ந்த தமிழக அணி, 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிறகு 97 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணி ஒருகட்டத்தில் 60 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு அபிஷேக் நாயரின் அபாரமான ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்புக்குப் பரபரப்பான முறையில் வெற்றி கண்டது மும்பை அணி. அபிஷேக் நாயர் 45 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியைக் கரை சேர்த்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com