

புரோ கபடி லீக் போட்டியின் 65-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் அணி 42-37 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வென்றது.
இரு அணிகளுக்கும் இடையே கொல்கத்தாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில், புணே அணி 18 ரைடு புள்ளிகள், 15 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது. மறுபுறம் தெலுகு அணி 20 ரைடு புள்ளிகள், 10 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 கூடுதல் புள்ளிகள் பெற்றது.
புணே தரப்பில் அதிகபட்சமாக அதன் ரைடர் தீபக் ஹூடா 20 ரைடுகள் சென்று 9 புள்ளிகள் பெற்றார். அணியின் பின்கள வீரர் கிரீஷ் மாருதி 6 டேக்கிள் புள்ளிகளை கைப்பற்றினார். தெலுகு தரப்பில் கேப்டன் ராகுல் செளதரி அதிகபட்சமாக 19 ரைடுகளில் 9 புள்ளிகளை கைப்பற்றினார். பின்கள வீரர் சோம்பீர் 4 புள்ளிகளை வென்றார்.
இந்த ஆட்டத்தில் புணே அணி தடுப்பாட்டத்தின் மூலம் புள்ளிகளை அதிகம் சேகரிக்க, தெலுகு அணி ரைடு மூலம் அதிக புள்ளிகள் பெற்றது.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய புணே அணி, முதல் பாதியில் 26-12 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. 2-ஆவது பாதி ஆட்டத்தில் தெலுகு அணி புள்ளிகள் இடைவெளியை குறைக்க முடிந்த போதிலும், தோல்வியை தவிர்க்க முடியாமல் 37-42 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்ந்தது.
ஆட்டம் சமன்: இதனிடையே, பெங்கால் வாரியர்ஸ்-தபங் டெல்லி அணிகள் மோதிய மற்றொரு ஆட்டம் 31-31 என்ற புள்ளிகள் கணக்கில் சமன் ஆனது.
இன்றைய ஆட்டம்
ஹரியாணா ஸ்டீலர்ஸ் -
பாட்னா பைரேட்ஸ்
நேரம்: இரவு 8 மணி
குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ் - யு.பி.யோதா
நேரம்: இரவு 9 மணி
இடம்: சோனிபட்
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.