பாட்மிண்டன் வீரரான ஸ்ரீகாந்த், தரவரிசையில் நெ.1 இடத்தை அடைவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் தனது தரவரிசை வரலாற்றில் இந்த இடத்துக்கு வருவது இது முதல்முறையாகும். இந்த சீசனில் இதுவரை 4 பட்டங்களை கைப்பற்றியுள்ள ஸ்ரீகாந்த், 2 இடங்கள் ஏற்றம் கண்டு 73,403 புள்ளிகளுடன் இந்த இடத்தை அடைந்துள்ளார். முதலிடத்தில் உலக சாம்பியனான டென்மார்க்கின் விக்டர் அக்ஸெல்சன் நீடிக்கிறார்.
நேற்று பதிவேற்றப்பட்ட தரவரிசைப் பட்டியலில் நான் 2-ம் இடம் பிடித்துள்ளேன். சிறப்பான முயற்சிகள் எடுத்து நெ. இடத்தை அடைவேன் என நம்பிக்கையுடன் ஸ்ரீகாந்த் ட்வீட் செய்துள்ளார்.