5 நாளும் பேட் செய்து புஜாரா புது சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5 நாளும் பேட் செய்து புஜாரா புது சாதனைப் படைத்துள்ளார்.
5 நாளும் பேட் செய்து புஜாரா புது சாதனை!

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேத்தேஷ்வர் புஜாரா புது சாதனைப் படைத்துள்ளார்.

இப்போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 16-ந் தேதி வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தான் இந்த விநோதச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

போட்டி தொடங்கியதில் இருந்தே மழையின் குறுக்கீடு இருந்த காரணத்தால் முதல் 2 தினங்களில் குறைவான ஓவர்களே வீசப்பட்டன. இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் ஆட்டத்தின் முதல் நாளே களமிறங்கிய புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இன்னிங்ஸில் அரைசதம் கடந்தார். மேலும், 3-ஆம் நாளில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 

இதன்பின்னர் ஆடிய இலங்கை அணியும் 4-ஆம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்ஸில் ஆல்-அவுட்டானது. இதனைத்தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தவன் ஆட்டமிழந்த காரணத்தால் 3-ம் நிலை வீரரான புஜாரா களமிறங்கினார். இதையடுத்து 5-ஆம் நாளில் அவுட்டானார். இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 5 நாளும் பேட் செய்து புது சாதனையைப் படைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com