அகில இந்திய காவல்துறை ஜூடோ சாம்பியன் போட்டிகள் தில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
5 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 314 வீராங்கனைகள், 800 வீரர்கள் என 1114-க்கு மேற்பட்ட ஜூடோ வீரர்கள் பங்கேற்கின்றனர். எல்லைப்புற எஸ்எஸ்பி பாதுகாப்பு படை இப்போட்டிகளை நடத்துகிறது. இதில் 34 மாநில, மத்திய காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் கலந்த கொள்கின்றனர். போட்டிகளில் ஜூடோ, வுஷு, டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவையும் இடம்பெறுகின்றன.
எஸ்எஸ்பி இயக்குநர் ஜெனரல் ஆர்.கே.மிஸ்ரா போட்டி அடையாள சின்னத்தை திங்கள்கிழமை வெளியிட்டார்.