டொரண்டோ மாஸ்டர்ஸ்: நடால், ஜோகோவிச் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
பந்தை விரட்டும் ரபேல் நடால்.
பந்தை விரட்டும் ரபேல் நடால்.


டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
கனடாவின் டொரண்டா நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெனாயிட் பியரை வென்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 2005, 2008, 2013-இல் நடால் இங்கு பட்டம் வென்றிருந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன் வாவ்ரிங்கா 1-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் மார்டன் புஸ்கோவிஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் 6-4, 6-4 என பிராட்லியையும், 4 முறை சாம்பியன் ஜோகோவிச் 6-3, 6-4 என கனடா வீரர் பீட்டர் போலன்ஸையையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் ஜான் ஐஸ்நர் 7-6, 6-2 என பிரான்ஸின் ஹெர்பெர்டை வீழ்த்தினார். மூன்றாம் நிலை வீரர் டெல் பொட்ரோ காயம் காரணமாக வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com