ரஞ்சி: 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழக அணி!

கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்ததால் 92 ரன்களுடன் ஷாருக் கானால் சதமடிக்கமுடியாமல் போனது... 
ரஞ்சி: 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழக அணி!

கேரளாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழகம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது தமிழ்நாடு. ஷாருக் கான் 82, முகமது 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழக அணி 98 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்ததால் 92 ரன்களுடன் ஷாருக் கானால் சதமடிக்கமுடியாமல் போனது. கேரளாவின் வாரியர் 5 விக்கெட்டுகளையும் பசில் தம்பி 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கேரள அணி, 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com