செர்பியாவின் சுபோட்டிகா நகரில் நடந்து வரும் 36-ஆவது கோல்டன் குளோவ் யூத் குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் 13 பேர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் பிரிவில் யூத் உலக சாம்பியன் ஜோதி குலியா (51 கிலோ), நிது (48 கிலோ), திவ்யா பவார் (54 கிலோ), மனிஷா (64 கிலோ), லலிதா (69 கிலோ), நேஹா யாதவ் (81 கிலோ) ஆகியோர் இறுதிக்கு முன்னேறினர்.
ஆடவர் பிரிவில் ஆகாஷ் குமார் (56 கிலோ), அங்கித் (60 கிலோ), ஆகாஷ் (64 கிலோ), விஜயதீப் (69 கிலோ), நிதின் குமார் (75 கிலோ), பாருன் சிங் (49) கிலோ), அமான் (91 கிலோ) ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதன் மூலம் அனைவரும் குறைந்தது வெள்ளிப் பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.
அதே நேரத்தில் அரையிறுதிச் சுற்றில் தோல்வியுற்ற சாக்ஷி (51 கிலோ), கைதானி (81 கிலோ), பவேஷ் கிட்டாமணி (52 கிலோ), ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.