உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
கனடாவின் மார்கம் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் குரூப் இ பிரிவில் இந்திய கலப்பு அணி புதன்கிழமை பாரோ தீவுகளை 5-0 என்ற கேம்கணக்கில் வென்று காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
வியாழக்கிழமை கடைசி ஆட்டத்தில்அல்ஜீரியாவுடன் மோதுகின்றனர். ஆசியசாம்பியன் லக்ஷயா சென்னுக்கு புதன்கிழமை ஓய்வு தரப்பட்டது.