இங்கிலாந்தின் பிர்மிங்ஹமில் 2022-ல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் மகளிர் கிரிக்கெட்டையும் சேர்க்கவேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.
20 வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 50 ஓவர் ஆடவர் கிரிக்கெட் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா தங்கமும் ஆஸ்திரேலியா வெள்ளியும் பெற்றன.
இந்நிலையில் 2022 காமன்வெல்த் போட்டியில் மகளிர் டி20 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தவேண்டும் என்று ஐசிசி கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து எழுத்துபூர்வமாகவும் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் கலந்துகொள்ளக்கூடிய விதத்தில் போட்டியை நடத்தலாம் என்றும் ஐசிசி ஆலோசனை கூறியுள்ளது.