தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?: ரோஹித் சர்மாவின் நீக்கம் குறித்து ஹர்பஜன் சிங் கேள்வி!

உண்மையில் தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?...
கோப்புப்படம்
கோப்புப்படம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் அணியில் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துடன் டெஸ்ட் ஆட்டங்களில் அவர் சோபிக்காத நிலையில் தேர்வுக் குழு அவரை நீக்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம்,ஆசிய கோப்பை என தொடர்ந்து விளையாடி வரும் பந்துவீச்சளர்கள் பும்ரா, புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும், ரோஹித் சர்மாவுக்கும் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை.

இந்தத் தேர்வு குறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது:

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு இடமில்லை. உண்மையில் தேர்வுக்குழுவினர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? யாருக்காவது இதன் விஷயம் தெரியுமா? தெரிந்தாலும் சொல்லுங்கள் ஏனெனில் என்னால் இதை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com