சுல்தான் ஜோஹோர் கோப்பை ஹாக்கி போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய ஜூனியர் அணி தகுதி பெற்றுள்ளது.
ஜோஹோர் நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக இந்திய அணி வெள்ளிக்கிழமை பிரிட்டன் அணியை எதிர்கொண்டது. இதில் கடுமையாக போராடியும் 2-3 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்ந்தது.
எனினும் 4 தொடர் வெற்றிகளின் மூலம் 12 புள்ளிகளை பெற்று இந்தியா ஏற்கெனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
பிரிட்டன் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
இப்போட்டியில் இந்தியா பெறும் முதல் தோல்வியாகும். இந்திய அணி வெல்லும் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை தவறவிட்டது. சனிக்கிழமை இறுதி ஆட்டம் நடக்கிறது.