தனது பாஸ்போர்ட்டை தொலைத்ததால் உதவுமாறு மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வாராஜுக்கு சுட்டுரை மூலம் கோரிக்கை வைத்தார் பாட்மிண்டன் வீரர் பாருபல்லி காஷ்யப்.
கடந்த 2014 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற காஷ்யப் தற்போது ஓடென்ஸ் நகரில் நடக்கவுள்ள டென்மார்க் ஓபன் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் தனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டார். இதனால் அவர் போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுட்டுரை மூலம் தனக்கு உதவுமாறு மத்திய அமைச்சர் சுஷ்மாவுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் அப்பதிவில் பிரதமர் மோடி, விளையாட்டு அமைச்சர் ரத்தோர் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.