பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார்

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார்

பிசிசிஐ சிஇஓ ராகுல் ஜோரி மீது மீ டூ மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஏப்ரல் 2016 முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய சிஇஓ பதவி வகித்து வருகிறார் ராகுல் ஜோரி.
 தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அவர் தன்னிடம் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் மீ டூ ஹேஷ்டாக் மூலம் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே இலங்கை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அர்ஜுண ரணதுங்க, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா ஆகியோர் மீதும் மீடூ ஹேஷ்டாக் மூலம் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 விளக்கம் தர சிஓஏ உத்தரவு: ராகுல் ஜோரி மீது மீ டூ வில் வெளியான பாலியல் புகார் எதிரொலியாக விளக்கம் தருமாறு அவருக்கு பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாக குழு உத்தரவிட்டுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் கடந்த 2001 முதல் 2016 வரை பல்வேறு நிலைகளில் ஜோரி பணிபுரிந்திருந்தார். அப்போது அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் ஹர்னீத் கெüர் பாதிக்கப்பட்ட நபர் பெயரை குறிப்பிடாமல் சுட்டுரையில் பதிவிட்டார்.
 இப்பிரச்னை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என சிஓஏ கோரிக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com