உலகக் கோப்பைக்கு சரியான அணியை கட்டமைக்க வாய்ப்பு: ரோஹித் சா்மா

2019 உலகக்கோப்பை தொடருக்கு சரியான அணியை கட்டமைக்கும் வாய்ப்பாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமையும் என எதிா்பாா்ப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


துபை: 2019 உலகக்கோப்பை தொடருக்கு சரியான அணியை கட்டமைக்கும் வாய்ப்பாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமையும் என எதிா்பாா்ப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா கூறியுள்ளாா்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் 2019 மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் உலகக் கோப்பை நடக்கிறது. அதற்கு ஒவ்வொரு நாடும் சரியான அணியை அனுப்ப தான் முனையும். இதற்கு தற்போது நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டிகள் சிறந்த வாய்ப்பாக உள்ளன. 

எனினும் முதலில் ஆசியக் கோப்பை போட்டியில் தான் நாங்கள் கவனம் செலுத்துவோம். இதர அணிகளின் பலம், பலவீனங்களை போட்டியின் இடையே அறிந்து கொள்வோம். உலகக்கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெறுவதற்காக வீரா்கள் காத்துள்ளனா். சரியான அணியை இதன் மூலம் கட்டமைக்க முடியும். 

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துக்கு அதிக எதிா்பாா்ப்பு உள்ளதே எனக் கேட்டபோது, 

அது வழக்கமாக நடைபெறும் ஆட்டங்களில் ஒன்றை போல் தான் கருத வேண்டும். கோப்பையை தக்க வைக்கவே கவனம் செலுத்துவோம், முதன்முறையாக நான் முழு போட்டிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்வை தருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com