ஓஸாமா என அழைத்ததாக மொயின் அலி புகார்: விசாரணை நடத்த சிஏ முடிவு

ஓஸாமா என ஆஸி. அணியின் வீரர் தன்னை அழைத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி எழுப்பிய புகார் குறித்து விசாரணை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) முடிவு செய்துள்ளது.
ஓஸாமா என அழைத்ததாக மொயின் அலி புகார்: விசாரணை நடத்த சிஏ முடிவு

ஓஸாமா என ஆஸி. அணியின் வீரர் தன்னை அழைத்ததாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி எழுப்பிய புகார் குறித்து விசாரணை நடத்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ) முடிவு செய்துள்ளது.
 இஸ்லாமியரான மொயின் அலி இங்கிலாந்து அணியில் பல ஆண்டுகளாக ஆல்ரவுண்டர் நிலையில் ஆடி வருகிறார். இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது, கார்டிஃப் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 77 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் மொயின்.
 இதுதொடர்பாக தான் எழுதவுள்ள சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள மொயின் அலி, அது சிறந்த டெஸ்ட் ஆட்டமாக அமைந்தது. எனினும் மைதானத்தில் ஒரு ஆஸி. வீரர் தன்னை ஓஸாமா என அழைத்தார். இது எனக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. எனது சகவீரர்களிடம் இதுதொடர்பாக தெரிவித்தேன். இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவர் இதுதொடர்பாக ஆஸி. பயிற்சியாளர் லெமனிடம் எழுப்பி இருந்தார்.
 லெமன் ஆஸி. வீரரிடம் கேட்ட போது தான் அவ்வாறு அழைக்கவில்லை என்றார். ஆனால் அது உண்மை எனக்கூறியிருந்தார்.
 இதுதொடர்பாக சிஏ வட்டாரங்கள் கூறியதாவது: இப்பிரச்னை மிகவும் கடுமையானதாகும். தேசிய அணியில் பங்கேற்று ஆடுவோருக்கு என தெளிவான வழிகாட்டுதல்கள், நடத்தை விதிகள் உள்ளன. இதை நாங்கள் தீவிரமாக கருதி, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் விவரங்களை கேட்டுள்ளோம் எனத் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com