"கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் குறித்து பரிசீலனை'

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சிஏ கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என சிஏ கூறியுள்ளது.
 இதற்கிடையே வரும் டிசம்பர் 6-ம் தேதி அடிலெய்டில் ஆஸி. அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் இந்தியா விளையாடுகிறது. இதனால் ஆஸி. அணியை எதிர்கொள்ளும் வகையில் கூடுதல் பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ரவிசாஸ்திரி கோரியிருந்தார்.
 இதுதொடர்பாக பிசிசிஐயிடம் இருந்து முறையான தகவல் ஏதும் வரவில்லை. எனினும் கூடுதல் பயிற்சி ஆட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
 வரும் நவம்பர் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஆஸி. சுற்றுப் பயணத்தில் 3 டி 20 ஆட்டங்கள், 3 ஒரு நாள் ஆட்டங்கள், 4 டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com