போலந்து குத்துச் சண்டை: சரிதாவுக்கு வெண்கலம்

போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
போலந்து குத்துச் சண்டை: சரிதாவுக்கு வெண்கலம்

போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.
 கிளிவைஸ் நகரில் 13-ஆவது ஸைலேஷியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் 60 கிலோ அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவை 0-5 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானின் கரீனாவிடம் தோல்வியுற்று வெண்கலப் பதக்கம் வென்றார். எனினும் இப்போட்டியில் நடுவர்கள் சரிதாவுக்கு எதிராக செயல்பட்டதாக இந்திய குழுவினர் புகார் தெரிவித்தனர். இதற்கிடையே ஜூனியர் அணியினர் சிறப்பாக செயல்பட்டு 6 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலத்தை வென்றநர். பாரதி, டிங்மிலா, சந்தீப் கெüர், நேஹா, அர்ஷி கனம், கோமல் தங்கப்பதக்கத்தையும், அமிஷா, சான்யா, தினேஷ் நாயக், சஞ்சய் குணேலே, ராஜ் சாஹிபா, லிபாஷி, வெள்ளியையும், நேஹா வெண்கலத்தையும் வென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com