ஆசியக் கோப்பை போட்டியில், சூப்பர் ஃபோர் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இரு வெற்றிகளுடன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஆனால், இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவன், புவனேஸ்வர் குமார், பூம்ரா, சாஹல் ஆகிய 5 வீரர்களும் ஓய்வு காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இதையடுத்து கேப்டன் பொறுப்பு தோனி வசம் சென்றுள்ளது. 696 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி கேப்டனாகச் செயல்படுகிறார் தோனி. கேப்டனாக விளையாடும் 200-வது ஒருநாள் ஆட்டம் இது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார், இந்த ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகியுள்ளார். கே.எல். ராகுல், மனிஷ் பாண்டே, தீபக் சஹார், கலீல் அஹமது, சித்தார்த் கெளல் ஆகிய 5 வீரர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.