மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

ராகுல் ரங்கசாமிக்கு வளர்ந்து வரும் வீரர் விருது

சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 1:21 am IST


சென்னையின் ராகுல் ரங்கசாமிக்கு இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் வளர்ந்து வரும் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் ராகுல் ரங்கசாமி வளர்ந்து வரும் மோட்டார் வாகன பந்தய வீரர் என்ற விருதைப் பெற்றார். 
அவர் 4 தேசிய பட்டங்கள், எம்ஆர்எப் எப்எம்எஸ்சிஐ தேசிய பந்தயத்திலும் வென்று கெளதம் சிங்கானியா கோப்பையும் வென்றார்.
சர்வதேச சங்கத் தலைவர் ஜி டாட் விருதுகளை வழங்கினார். மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவர் ஜிஆர்.கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மோட்டார் கார்பந்தய வீரர்கள் கெளரவ் கில், ஆர்மன் இப்ராஹிம், அமித் ரஜித் கோஷ், அஷ்வின் நாயக், வீராங்கனைகள் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோஹியா உள்ளிட்டோரும் கெளரவிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.