மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

மலேசிய ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மலேசிய ஓபன் பாட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்


மலேசிய ஓபன் பாட்மிண்டனில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர்கொண்டார். அதில் பிவி சிந்து 22-20, 21-12 என்கிற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், அவர் 2-ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, 2-ஆவது சுற்றில் பிவி சிந்து கொரிய வீராங்கனை சுங் ஜி ஹியூனை எதிர்கொள்ளவுள்ளார். 

இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் இந்தோனேஷிய வீரர் மௌலானா முஸ்தோபாவை எதிர்கொண்டார். 38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் ஸ்ரீகாந்த் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ள இவர், தாய்லாந்து வீரர் கோசிட் பேத்பிரதாப்பை எதிர்கொண்டார். 

அதேசமயம், மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை பான்பவி சோசுவாங்கை எதிர்கொண்டார். இதில், சாய்னா நேவால் 22-20, 15-21, 10-21 என்கிற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.    

ஹெச்எஸ் பிரணாய் தாய்லாந்து வீரர் சித்திகோம் தம்மாசின்னை எதிர்கொண்டார். இதில், அவர் 12-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com