2015 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்ற 7 இந்திய வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ...
2015 உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெற்ற 7 இந்திய வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் இன்று அறிவித்தது பிசிசிஐ.

2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், கெதர் ஜாதவ், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), பாண்டியா, குல்தீப் யாதவ்,  சஹால், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி, ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜடேஜா.

2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணி

எம்எஸ் தோனி (கேப்டன்), அஸ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, அக்‌ஷர் படேல், ரஹானே, ரெய்னா, ராயுடு, மோஹித் சர்மா, ரோஹித் சர்மா, உமேஷ் யாதவ். (இஷாந்த் சர்மா முதலில் தேர்வானார். அவருக்குக் காயம் ஏற்பட்டதால் பிறகு மோஹித் சர்மா தேர்வானார்.)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com