உலகக் கோப்பை அணித் தேர்வுக்கு பின் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மீண்டும் கவனத்தை செலுத்த வேண்டும் என கொல்கத்தா கேப்டன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
உலகக் கோப்பை அணி தேர்வு முடிந்து விட்டது. தற்போத மீண்டும் ஐபிஎல் போட்டியில் கவனத்தை செலுத்த உள்ளேன். அடுத்த சில ஆட்டங்கில் முழுமையாக திறமையை வெளிப்படுத்த வேண்டும். கோலி தலைமையிலான பெங்களூரு அணி கடினமான அணியாகவே உள்ளது. இந்த சீசனில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது தான், எங்கள் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்து ஆடுவோம் என்றார் தினேஷ்.