ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு மகளிர் பிரிவில் இந்தியாவின் சோனியா சஹல், சதீஷ் குமார் ஆகியோர் முன்னேறினர். அதே நேரத்தில் 4 இந்திய நட்சத்திரங்களும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை தொடக்க சுற்று ஆட்டங்களில் தேசிய சாம்பியன் தீபக் 49 கிலோ, ரோஹித் டோகாஸ் 64 கிலோ ஆகியோர் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். ஆஷிஷ் 69 கிலோ பிரிவில் கம்போடிய வீரரை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
காலிறுதியில் சோனியா, சதீஷ்:
ஆடவர் 91 கிலோ பிரிவில் சதீஷ்குமார் ஈரானிய வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் 57 கிலோ பிரிவில் சோனியா சஹல் வியட்னாம் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். 81 கிலோ பிரிவில் பூஜாராணி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.