ஆசிய குத்துச்சண்டை போட்டி: காலிறுதியில் தீபக், லவ்லினா

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போரோகைன், மணிஷா மெüன், தீபக், ரோகித், ஆஷிஷ்குமார் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போரோகைன், மணிஷா மெüன், தீபக், ரோகித், ஆஷிஷ்குமார் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் பிரிவு 69 கிலோ பிரிவில் லவ்லினா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வியட்னாமின் டிரான் லின்னை வென்றார். 54 கிலோ பிரிவில் மணிஷா மெüன் காலிறுதிக்கு முன்னேறினார்.
48 கிலோ பிரிவில் நிது மட்டுமே தோல்வியுற்று வெளியேறினார்.
ஆடவர் 49 கிலோ பிரிவில் தேசிய சாம்பியன் தீபக் 5-0 என இலங்கையின் முட்டுநாகாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
60 கிலோ பிரிவில் ஷிவ் தாப்பா 4-1 என்ற புள்ளிக்கணக்கில் கொரியாவின் கிம் வொன்ஹோவை வீழ்த்தினார்.
அதே போல் 75 கிலோ பிரிவில் ஆசிஷ் குமார், 64 கிலோ பிரிவில் ரோகித் டோகாஸ், 56 கிலோ பிரிவில் கவிந்தர் சிங் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com