பாங்காக்கில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனைகளில் அரையிறுதிச் சுற்றுக்கு ஒருவரும், காலிறுதிக்கு 7 பேரும், நாக் அவுட் சுற்றில் ஒருவர் என 9 பேர் களத்தில் உள்ளனர். ஆடவர் பிரிவில் 10 வீரர்களில் 9 பேர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன், கேப்டன் தோனி ஆகியோர் விராட் கோலி குறித்து அறிந்திராத நிலையில், இந்திய அணியில் அவர் மிக விரைவாக நுழைய நான் வகை செய்தேன் என முன்னாள் தேர்வுக் குழுத் தலைவர் வெங்கசர்க்கார் கூறியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் கோலி இடம் பெற்றிருந்தார் எனவும் அவர் கூறினார்.
உலகக் கோப்பை போட்டியில் எவ்வாறு சிறப்பாக ஆடவேண்டும் என இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனையை கேட்டிருப்பதாக பாகிஸ்தான் தொடக்க வீரர் அபித் அலி தெரிவித்துள்ளார்.