ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்

கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு.சித்ரா 1500 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்

கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.யு.சித்ரா 1500 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை எட்டி தங்கம் வென்றார்.
இந்தப் பதக்கத்துடன் சேர்த்து இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் மொத்தம் 3 தங்கம் கிடைத்துள்ளது.
1500 மீட்டரை 4 நிமிடம் 14.56 விநாடிகளில் கடந்தார் சித்ரா.
ஆடவர் பிரிவில் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளி வென்றார்.
200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 23.24 விநாடிகளில் இலக்கை கடந்து வெண்கலம் வென்றார்.
முன்னதாக, 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவும், ஆடவர் பிரிவில் குண்டு எறிதலில் பால் சிங் தூரும் கடந்த திங்கள்கிழமை தங்கம் வென்றனர்.
சித்ரா கூறுகையில், "இலக்கை எட்ட மிகவும் போராட வேண்டியிருந்தது. கடுமையான உழைப்பை கொடுத்தேன்' என்றார்.
புதன்கிழமையுடன் நிறைவு பெற்ற இந்தப் போட்டியில், இந்தியா 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கத்துடன் நிறைவு செய்தது.
4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் குன்ஹு முகமது, ஜீவன் கே.எஸ்., முகமது அனஸ், ராஜீவ் ஆரோக்யா ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளி வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com