வெற்றிக்கான மந்திரத்தை கூற முடியாது

வெற்றி மந்திரத்தை கூறிவிட்டால் சென்û சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்காது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்தார்.
வெற்றிக்கான மந்திரத்தை கூற முடியாது

வெற்றி மந்திரத்தை கூறிவிட்டால் சென்û சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்காது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நெருங்க உள்ள நிலையில், முதுகு பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதால் மிகவும் கவனமாக விளையாட வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை. ஆட்டம் முடிவடைந்த பிறகு நடைபெற்ற நிகழ்ச்சியில் தோனி கூறியதாவது:
சிஎஸ்கே அணி வெற்றி பெற்று வருவதற்கான மந்திரத்தை நான் கூறிவிட்டால் அந்த அணி நிர்வாகம் என்னை ஏலத்தில் எடுக்காது. இதனால், அந்த வெற்றி மந்திரத்தை ரகசியமாக வைக்கிறேன். அணி நிர்வாகமும், ரசிகர்களும் கொடுத்துவரும் ஆதரவுமே வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று. நிர்வாக ஊழியர்களும் பெரிய அளவில் உதவி புரிந்து வருகின்றனர். இதைத் தாண்டி வேறு எதையும் என்னால் கூற முடியாது.
முதுகு பிடிப்பு பாதிப்பு மிகவும் மோசமாக இல்லை. உலகக் கோப்பை தொடர் வரவுள்ளது. இதனால், கவனமாக விளையாட வேண்டியுள்ளது  என்றார் தோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com