இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் நாள் ஆட்டத்தில் ஏராளமான தீர்ப்புகள் தவறாக வழங்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் போட்டி, பிர்மிங்காமில் இன்று தொடங்கியுள்ளது. இதன்மூலம் அனைவரும் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும் ஆஷஸ் தொடர் மூலமாக அமர்க்களமாகத் தொடங்கியுள்ளது.
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வேகங்களுக்கு கட்டுப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் மட்டும் அரைசதம் அடித்து 66 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
ஆனால், இந்த முதல் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரை நடுவர்கள் பல தவறான தீர்ப்புகளை வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுவர்களும், மோசமான தீர்ப்பும்:
முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவெளி வரைதான் இந்த நிலை. இன்னும், முதல் நாள் ஆட்டத்தில் சுமார் 35 ஓவர்கள் மீதமுள்ளது. இங்கிலாந்துக்கு இரண்டு இன்னிங்ஸ் பேட்டிங் இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு ஒரு இன்னிங்ஸ் முழுமையான பேட்டிங் இருக்கிறது. இப்படி இருக்கையில், நடுவர்கள் இப்படி தொடர்ந்து தவறான தீர்ப்புகளை அளித்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு உலகக் கோப்பை தொடர் போன்றது. அதோடு அல்லாமல், இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டமாகும். எனவே, இதுபோன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் நடுவர்கள் தீர்ப்பு இப்படி அமைவது கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை, ஐசிசி நிச்சயம் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடுவர்கள் மோசமான தீர்ப்புகளை வழங்கியிருந்தாலும், இன்றைய ஆட்டத்தில் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து முறையிட்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா 1 ரிவியூவை இழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.