முதல் தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஷுப்மன் கில் படைத்துள்ளார்.
இந்திய மற்றும் மே.இ.தீவுகள் ஏ அணிகளுக்கு இடையிலான 3-ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் கரிபீயன் தீவுகளில் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை 19 வயதான ஷுப்மன் கில் 250 பந்துகளில் 204 ரன்களை விளாசி கெளதம் கம்பீரின் சாதனையை முறியடித்தார்.
3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா ஹனுமாவிஹாரியுடன் இணைந்து அற்புதமாக ஆடினார். கில் இரட்டை சதத்தில் 2 சிக்ஸர், 19 பவுண்டரிகள் அடங்கும். விஹாரி 118 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஷுப்மன் கில் இரட்டை சதம் அடித்தவுடன் 4 விக்கெட் இழப்புக்கு 365 ரன்களுடன் டிக்ளேர் செய்தது இந்திய ஏ அணி.
வெற்றிக்கு 373 ரன்கள் தேவை என்ற பெரிய ஸ்கோருடன் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை எடுத்துள்ளது மே.இ.தீவுகள்.