துளிகள்...

பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் முடித்துக் கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் சாவ்பாலோ காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


பிரேசில் கால்பந்து நட்சத்திர வீரர் நெய்மர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் முடித்துக் கொள்ளவேண்டும் என நீதிமன்றத்தில் சாவ்பாலோ காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பாரிஸ் ஓட்டல் ஒன்றில் நெய்மர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக பிரேசில் பெண் ஒருவர் புகார் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ப்ரீமியர் லீக் ஐபிஎல் போட்டிகள், நியூஸிலாந்து வீரர்களின் விளையாட்டுத் திறன் மேம்பாட்டுக்கு மிகவும் உதவியாக அமைந்தது. குறிப்பாக உலகின் தலைசிறந்த வீரர்களுடன் ஆடுவதற்கான வாய்ப்பை தந்தது என நியூஸிலாந்து மூத்த வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நியூஸி. முன்னாள் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம், ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கரீபியன் லீக் அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பொறுப்பேற்பார்.

நியூஸிலாந்துடன்  வரும் புதன்கிழமை தொடங்கவுள்ள முதல் டெஸ்ட்டுக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் முன்னாள் கேப்டன் தினேஷ் சண்டிமால் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஏடிபி எனப்படும் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக முன்னணி வீரர்கள் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் இருவரும் சேர்ந்து இனிமேல் டென்னிஸ் வீரர்களின் நலனுக்காக இணைந்து பாடுபடுவோம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com