ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த மெயில்சன் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
பிரேசிலைச் சேர்ந்த அவர் கேப்டனாகவும் செயல்பட்டு 3 சீசன்களில் ஆடியுள்ளார். 2015, 2017 இறுதிச் சுற்றில் சென்னையின் அணி பட்டம் வென்றது. ஐஎஸ்எல் இறுதியில் 2 முறை கோலடித்த வீரர் என்ற சிறப்பை மெயில்சன் பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியிலும் சென்னையின் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற உதவினார்.
அவர் விலகியதை அடுத்து, ருமேனியாவைச் சேர்ந்த மிட்பீல்டர் லூசியன் கோயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூல் வரும் 2019-20 சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறியுள்ளார்.