சென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்

ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.
சென்னையின் எஃப்சி வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் விலகல்


ஐஎஸ்எல் அணிகளில் ஒன்றான சென்னையின் சென்ட்ரல் மிட்பீல்டர் மெயில்சன் ஆல்வ்ஸ் பரஸ்பர ஒப்பந்தத்தின்படி விலகி உள்ளார்.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த மெயில்சன் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.
பிரேசிலைச் சேர்ந்த அவர் கேப்டனாகவும் செயல்பட்டு 3 சீசன்களில் ஆடியுள்ளார். 2015, 2017 இறுதிச் சுற்றில் சென்னையின் அணி பட்டம் வென்றது. ஐஎஸ்எல் இறுதியில் 2 முறை கோலடித்த வீரர் என்ற சிறப்பை மெயில்சன் பெற்றுள்ளார்.
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியிலும் சென்னையின் அணி தொடர்ந்து 5 வெற்றிகளை பெற உதவினார்.
அவர் விலகியதை அடுத்து, ருமேனியாவைச் சேர்ந்த மிட்பீல்டர் லூசியன் கோயின் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூல் வரும் 2019-20 சீசனில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும் என பயிற்சியாளர் ஜான் கிரகோரி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com