இங்கிலாந்தின் உள்ளூர் போட்டி ஒன்றில் பந்து தாக்கியதில் ஒரு மாதம் கழித்து அப்போட்டியின் நடுவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில்,
பெம்ப்ரோக்ஷயரின் ஹன்டல்டன் பகுதியைச் சேர்ந்த ஜான் வில்லியம்ஸ் (80), பெம்ப்ரோக், நார்பெத் இடையில் ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆவது டிவிஷன் கௌன்டி ஆட்டத்தில் நடுவராக செயல்பட்டார்.
அப்போது அவர் மீது பந்து தாக்கியதில் மயக்கமடைந்தார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், ஆகஸ்ட் 16-ஆம் தேதி அவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.
மறைந்த ஜான் வில்லியம்ஸ், சிறந்த மனிதர் மற்றும் மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு கொண்டவர். கிரிக்கெட்டுக்காக தனது வாழ்வின் அதிக நேரங்களை செலவிட்டவர் என அப்பகுதி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.