உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி தொடக்க சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சாய் பிரணீத், எச்.எஸ். பிரணாய் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இப்போட்டியில் சாய் பிரணீத் 21-17, 21-16 என கனடாவின் ஜேஸன் அந்தோணியையும், மற்றொரு ஆட்டத்தில் எச்.எஸ். பிரணாய் 17-21, 21-10, 21-11 என பின்லாந்தின் எய்டு ஹெனாவோ வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் மேக்னா-பூர்விஷா இணை 21-10, 21-18 என்ற கேம் கணக்கில் கெளதமாலாவின் டயானா-அலெஜாண்டாவை வீழ்த்தினர்.