கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடைக்காலம் குறைப்பு:  2020 செப்டம்பரில் முடிகிறது

ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடைக்காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே.ஜெயின் (நீதிபதி ஓய்வு) உத்தரவி
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடைக்காலம் குறைப்பு:  2020 செப்டம்பரில் முடிகிறது


ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடைக்காலத்தை 7 ஆண்டுகளாக குறைத்து பிசிசிஐ மத்தியஸ்தர் டி.கே.ஜெயின் (நீதிபதி ஓய்வு) உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎல் ஆட்டங்களில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பிசிசிஐ ஸ்ரீசாந்த் மற்றும் அவரது ராஜஸ்தான ராயல்ஸ் அணி சக வீரர்கள் அஜித் சண்டிலா, அங்கித் சவான் ஆகியோருக்கு ஆயுள் தடை விதித்தது. இதை எதிர்த்து கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் ஸ்ரீசாந்த் முறையிட்டார். 
கடந்த மார்ச் 15-ஆம் தேதி பிசிசிஐ ஒழுங்குமுறை குழுவின் ஆணையை நிராகரித்தது உச்சநீதிமன்றம். ஸ்ரீசாந்த் தண்டனைக் காலம் குறித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து பிசிசிஐ மத்தியஸ்தர் நீதிபதி டிகே.ஜெயின் (ஓய்வு) இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். இதில் ஸ்ரீசாந்தின் ஆயுள் தடையை குறைக்க முடிவு செய்து உத்தரவிட்டார். இதன்படி 13.9.2013 முதல் 7 ஆண்டுகள் ஸ்ரீசாந்த் கிரிக்கெட் ஆட தடை விதித்தார்.
இதனால் வரும் 2020 செப்டம்பர் மாதத்துடன் அவரது தடைக்காலம் முடிவடைகிறது. அதன் பின் மீண்டும் தனது கிரிக்கெட் வாழ்வை ஸ்ரீசாந்த் தொடரலாம்.
அவரது கிரிக்கெட் ஆடும் காலம் ஏறக்குறைய முடிந்து விட்ட நிலையில், அவரது தடைக்காலத்தை குறைப்பதே நீதியாக இருக்கும் என ஜெயின்தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது தரப்பில் மூத்த வழக்குரைஞர் சல்மான் குர்ஷித் ஆஜராகி வாதாடினார்.  ஸ்ரீசாந்த் கடைசியாக 2011-இல் இந்திய அணியிலும், 2013-இல் ஐபில் தொடரிலும் ஆடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com