15 வருடங்களாக கர்நாடக ரஞ்சி அணியில் இடம்பெற்ற வினய் குமார் இந்த வருடம் முதல் புதுச்சேரி அணிக்காக விளையாடவுள்ளார்.
இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார், கர்நாடக அணி கேப்டனாகப் பதவி வகித்து இரு ரஞ்சி கோப்பைகளை 2013-14, 2014-15 ஆகிய வருடங்களில் வென்றார். இந்நிலையில் 35 வயது வினய் குமார் இந்த வருடம் புதுச்சேரி அணிக்காக விளையாடவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்த வினய் குமார், கர்நாடக அணியில் இருந்த 15 வருட கால அனுபவத்தை என்னால் மறக்கமுடியாது. சில வருடங்கள் கழித்து, கர்நாடக அணிக்குத் திரும்பி என்னாலான எந்தவொரு உதவியையும் செய்யத் தயாராக இருப்பேன் என்று கூறியுள்ளார்.