துரந்து கோப்பை இறுதிச் சுற்றில் கோகுலம் கேரளா

துரந்து கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்துக்கு கோகுலம் கேரளா எஃப்சி அணி தகுதி பெற்றுள்ளது.
வெற்றி மகிழ்ச்சியில் கோகுலம் கேரள அணி வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் கோகுலம் கேரள அணி வீரர்கள்.


துரந்து கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்துக்கு கோகுலம் கேரளா எஃப்சி அணி தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.
முதல் ஆட்டம் கோகுலம் கேரளாவும்-ஈஸ்ட் பெங்கால் அணிகள் இடையே நடைபெற்றது. 
இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்திய நிலையில், ஈஸ்ட் பெங்கால் அணியின் சமத் அலி 18-ஆவது நிமிடத்தில் முதல் கோலடித்தார்.
அதன் பின் கோகுலம் வீரர் மார்கஸ் ஜோசப் தங்களுக்கு கிடைத்த பெனால்டியை கோலாக்கினார். வழக்கமான ஆட்ட நேர முடிவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இதனால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. 
இதில் கோகுலம் தரப்பில் புருனோ, ஜஸ்டின் ஜார்ஜ், லால்ரோமவியா கோலடித்தனர்.
ஈஸ்ட் பெங்கால் தரப்பில் லால்ரின்டிகா கோலடித்தார். ஜேயம் கோலடோ, டோன்டோம்ô சிங் ஆகியோரின் கோல் முயற்சிகளை முறியடித்தார் கோகுலம் கோல் கீப்பர் உபையது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com