புரோ கபடி லீக் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29-26 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை
வென்றது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் பரபரப்பாக இருந்தது. முதல் பாதி நிறைவில் பாட்னா 15-11 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற குஜராத் வீரர்கள் சிறப்பாக ஆடி முன்னிலையை குறைத்தனர்.
இறுதியில் 29-26 என்ற புள்ளிக் கணக்கில் 3 முறை சாம்பியன் பாட்னாவை வீழ்த்தினர்.