உலக சாம்பியன் பி.வி.சிந்து: முதல் இந்திய வீராங்கனை

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
உலக சாம்பியன் பி.வி.சிந்து: முதல் இந்திய வீராங்கனை

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.

ஸ்விட்சர்லாந்தின் பேஸல் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் முதல் நிலை வீராங்கனை ஜப்பானின் நúஸாமி ஒகுஹராவை எதிர்கொண்டார் 5-ஆம் நிலை வீராங்கனையான சிந்து.

முழுமையான ஆதிக்கம்: முதல் கேமை 21-7 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்ற சிந்து, இரண்டாவது கேமிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி அதிலும் 21-7 என கைப்பற்றினார். முதல் கேம் தொடங்கியவுடனே சிந்து அபாரமாக ஆடி 7-1 என முன்னிலை பெற்றார்.

அடுத்தடுத்து பலமான ஷாட்களால் ஒகுஹராவை நிலைகுலையச் செய்த சிந்து 14-2 என மீண்டும் முன்னிலை பெற்றார். இடையில் 2 புள்ளிகளை ஜப்பான் வீராங்கனை பெற்றார். இறுதியில் 16 நிமிடங்களில் 21-7 என முதல் கேமை வசப்படுத்தினார் சிந்து.

38 நிமிடங்களில் வெற்றி: இரண்டாவது கேமிலும் ஒகுஹரா செய்த தவறுகள் அவருக்கு பாதகமாக அமைந்தன. அந்த கேமில் முதல் புள்ளியை அவர் பெற்றாலும், சிந்து சிறப்பாக ஆடி 9-2 என முன்னிலை பெற்றார். அடுத்து ஒகுஹரா 2 புள்ளிகளைப் பெற்ற நிலையில் 9-4 என்ற நிலை இருந்த போதும், சிந்து அடுத்து புள்ளிகளை குவித்து 11-4 என முன்னிலை பெற்றார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்த சிந்து, இறுதியில் 21-7 என இரண்டாவது கேமையும் கைப்பற்றி முதன்முறையாக தங்கப்பதக்கத்துடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.

சாதனையை சமன் செய்த சிந்து: ஏற்கெனவே உலக சாம்பியன் போட்டியில் 5 முறை பதக்கம் வென்றிருந்த சீன வீராங்கனை ஸாங் நிங்கின் சாதனையையும் இந்த போட்டியில் சமன் செய்தார் சிந்து.
 
தங்கத்தை வசப்படுத்தினார்

24 வயதான பி.வி.சிந்து, ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் வெள்ளியுடன் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார். 2013, 2014 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம், 2017, 2018 போட்டிகளில் வெள்ளி பதக்கம், 2018 ஜகார்த்தா ஆசிய போட்டியில் வெள்ளி, காமன்வெல்த் போட்டியில் வெள்ளி என தொடர்ந்து வெள்ளிப் பதக்கங்களை வென்று வந்தார். இதனால் சிந்துவுக்கு இறுதிச் சுற்றில் எப்போதும் தோல்வியடைவதே வழக்கம் என்ற விமர்சனம் எழுந்தது. தற்போது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதின் மூலம் அதை முறியடித்துள்ளார். மேலும் 2018 வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியிலும் ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் அவர்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை, நீண்ட காலம் காத்திருந்தேன்

தங்கப் பதக்கம் வெல்ல நீண்ட காலம் காத்திருந்தேன். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை என பி.வி.சிந்து கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியின் போது நமது தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மிகவும் சிறந்த தருணம் இது. நாட்டுக்காக ஆடுவது மிகவும் கெளரவமான விஷயமாகும். ஒவ்வொரு ஆட்டத்தைப் போலவே இந்த இறுதி ஆட்டத்தையும் எதிர்கொண்டேன். இதனால் எனக்கு தேவையற்ற அழுத்தம் ஏற்படுவதை தவிர்த்தேன். இறுதி ஆட்டம் எனக் கருதாமல் வழக்கமாக 100 சதவீதம் திறமையை வெளிப்படுத்தி ஆடினேன். வெற்றி, தோல்வி என்பது சகஜமானது. ஆனால் மைதானத்தில் முழு திறமையை வெளிப்படுத்தி ஆடுவதே முக்கியமானது. ஜப்பான் வீராங்கனைகள் நீண்ட நேரம் ஆடுவதில் தேர்ந்தவர்கள். ஆனால் ஆட்டத்தின் போக்கை எனக்கு சாதகமாக மாற்றி, ஆதிக்கத்தை செலுத்தினேன் என்றார் சிந்து.

ஒகுஹரா கூறுகையில்: சிந்துவின் ஆட்டத்துக்கு என்னால் ஈடுதரமுடியவில்லை. முதலில் நம்பிக்கையுடன் ஆட்டத்தை தொடங்கினேன். ஆனால் சிந்துவின் வேகமான ஷாட்களை எதிர்கொள்ள முடியவில்லை. எனது உடல்தகுதி மற்றும் மன வலிமையை அதிகரிக்க வேண்டும்.

ஒகுஹராவை பழி வாங்கிய சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒகுஹராவை வீழ்த்தியதின் மூலம் 2017- இறுதிச் சுற்றில் தான் பெற்ற தோல்விக்கு பழிக்கு பழி வாங்கினார் சிந்து. கடந்த 2017-இல் கிளாஸ்கோவில் உலக போட்டி இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் ஒகுஹரா-சிந்து மோதினர். இதில் முதல் கேமை 19-21 என ஒகுஹரா கைப்பற்றினார். இரண்டாவது கேமை 22-20 என சிந்து கைப்பற்றிய நிலையில், கடைசி கேம் மிகவும் பரபரப்பாக அமைந்தது. அதில் 20-22 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோல்வியுற்று வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார் சிந்து. அந்த ஆட்டம் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்தது குறிப்பிடத்தக்கது. பாட்மிண்டன் வரலாற்றில் மிகச்சிறந்த இறுதி ஆட்டமாக இது கருதப்படுகிறது.

தாய்க்கு அர்ப்பணிப்பு

ஹைதராபாதைச் சேர்ந்த சிந்துவின் பெற்றோர் பி.வி. ரமணா, பி. விஜயா. அவரது தாயாருக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்ற நிலையில் தனது முதல் தங்கப் பதக்கத்தை தாய்க்கு அர்ப்பணிப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் சிந்து.

சிந்துவின் இறுதிச் சுற்று பயணம்

காலிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை சீன தைபேயின் டை ஸþவை 12-21, 23-21, 21-19 என போராடி வென்றார். அரையிறுதியில் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெயை 21-7, 21-14 என எளிதில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக நுழைந்தார்.

உலகப் போட்டியில் முதல் தங்கம்

ஏற்கெனவே உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் 2 வெண்கலம் வென்றிருந்த சிந்து, 2017 இறுதிச் சுற்றில் ஒகுஹராவிடமும், 2018-இல் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினிடமும் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில் தற்போது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார்.

பயிற்சியாளர், ரசிகர்களுக்கு நன்றி

தனது வெற்றி குறித்து சிந்து கூறியதாவது: கடந்த முறையும், அதற்கு முந்தைய ஆண்டும், இறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தேன். எனவே இந்த வெற்றி எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம் ஆகும். எனக்கு மைதானத்தில் ஊக்கம் தந்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தியனாக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். பயிற்சியாளர் கிம், கோபிசந்த் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் தங்கப் பதக்கத்தை தாய்க்கு அர்ப்பணிக்கிறேன் என்றார் சிந்து.
 
ஒட்டுமொத்த நாட்டுக்கும் சிறப்பான தருணம் இது. மைதானத்தில் உங்களின் ஆட்டம், கடின உழைப்பு, பொறுமை, போன்றவை லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கிறது. எதிர்கால போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள்.

ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர்: உலக சாம்பியன் போட்டியில் சிந்து தங்கம் வென்றது தலைமுறை கடந்து ஊக்கம் தரும் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரையில் (டுவிட்டர்) மோடி பதிவிட்டுள்ளதாவது: திறமை வாய்ந்த சிந்து, மீண்டும் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார். உலக பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். பாட்மிண்டனில் அவரது அர்ப்பணிப்பு, நாட்டம் அளப்பரியது. சிந்துவின் வெற்றி தலைமுûயைக் கடந்து ஊக்கம் தரும் என்றார்.

நரேந்திர மோடி, பிரதமர்: அற்புதமாக ஆட்டம், முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றதற்கு பாராட்டுகள், இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்.

சச்சின், முன்னாள் கிரிக்கெட் வீரர்: வியக்கத்தக்க சாதனை புரிந்ததின் மூலம் அனைத்து இந்தியர்களையும் கெளரவப்படுத்தியுள்ளார் சிந்து. சாம்பியன்களை உருவாக்க அரசு தொடர்ந்து ஊக்கம், ஆதரவு தரும்.

கிரண் ரிஜிஜு, மத்திய அமைச்சர்: வாழ்த்துகள். திறமை, உடல்தகுதி, மனவலிமையுடன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து.

சாய்னா, பாட்மிண்டன் வீராங்கனை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, இந்திய பாட்மிண்டன் சங்க தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ், ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோரும் சிந்துவை பாராட்டியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com